தம்பலகாமம் பிரதேச செயலகப்பிரிவின் பத்தினிபுரம் செளபாக்யா உற்பத்தி கிராம வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துக்கோரல தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
9.9 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத் திட்டத்தின் கீழ் இக்கிராமம் நிலக் கடலை உற்பத்தி கிராமமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவசியமான நீர்ப்பம்பிகள் மற்றும் நிலக்கடலை என்பன இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, பிரதேச அரசியல் தலைவர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.பரமேஸ்வரன், தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகெளரி சிறீபதி, சக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை